தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்


உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

370. மருதம்
வாராய், பாண! நகுகம்-நேரிழை
கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,
5
'புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித்
திதலை அல்குல் முது பெண்டு ஆகி,
துஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி?' என,
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி,
உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல,
10
முகை நாண் முறுவல் தோற்றி,
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே.
ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணர்க்குச் சொல்லியது; முன் நிகழ்ந்ததனைப் பாணர்க்குச் சொல்லியதூஉம் ஆம்.- உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:17:18(இந்திய நேரம்)