தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பூதங்கண்ணனார்


பூதங்கண்ணனார்

140. குறிஞ்சி
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி,
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்
5
பெருங் கண் ஆயம் உவப்ப, தந்தை
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து,
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே!-என்னதூஉம்
10
அருந் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.
குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது.-பூதங்கண்ணனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:27:33(இந்திய நேரம்)