தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மீளிப் பெரும்பதுமனார்


மீளிப் பெரும்பதுமனார்

109. பாலை
'ஒன்றுதும்' என்ற தொன்று படு நட்பின்
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று,
'அன்னவோ, இந் நன்னுதல் நிலை?' என,
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி
5
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து,
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என, ஒருவேன் ஆகி
10
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே!
பிரிவிடை ஆற்றாளாய தலைமளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள்சொல்லியது.-மீளிப் பெரும்பதுமனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:32:11(இந்திய நேரம்)