தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உறை துறந்திருந்த


உறை துறந்திருந்த

164. பாலை
'உறை துறந்திருந்த புறவில், தனாது
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக,
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச்
சென்றனர் ஆயினும், நன்று செய்தனர்' எனச்
5
சொல்லின் தெளிப்பவும், தெளிதல் செல்லாய்-
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென,
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ,
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது
10
மாறு புறக்கொடுக்கும் அத்தம்,
ஊறு இலராகுதல் உள்ளாமாறே.
பொருள் முடித்து வந்தான் என்பது, வாயில்கள்வாய்க் கேட்ட தோழி தலைவிக்குஉரைத்தது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:50:55(இந்திய நேரம்)