தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

யாங்கு ஆகுவமோ


யாங்கு ஆகுவமோ

147. குறிஞ்சி
யாங்கு ஆகுவமோ-'அணி நுதற் குறுமகள்!
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி,
5
அன்னை ஆனாள் கழற, முன் நின்று,
'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே;
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து,
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
10
பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு,
தலை இறைஞ்சினளே அன்னை;
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே?
சிறைப்புறமாகத்தோழி சொல்லியது.-கொள்ளம்பக்கனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:21:19(இந்திய நேரம்)