தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கணைக் கோட்டு வாளைக்


கணைக் கோட்டு வாளைக்

164. மருதம்
கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு
துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண் பெரும் பௌவம் அணங்குக-தோழி!-
மனையோள் மடமையின் புலக்கும்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!
காதல்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது. - மாங்குடிமருதன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:44:42(இந்திய நேரம்)