Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பாடங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பிற
புதிய பாடத்திட்டம் 2022
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
351-360
351-360
Primary tabs
பார்
(active tab)
What links here
351-360
351
அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய்,
அருஞ் சுரம் செல்வோர், அருந்தினர் கழியும்
காடு பின் ஒழிய வந்தனர்; தீர்க, இனி
பல் இதழ் உண்கண் மடந்தை! நின்
5
நல் எழில் அல்குல் வாடிய நிலையே.
பிரிந்த தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 1
352
விழுத் தொடை மறவர் வில் இடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங் கை யானை இருஞ் சினம் உறைக்கும்
வெஞ் சுரம் 'அரிய' என்னார்,
5
வந்தனர் தோழி! நம் காதலோரே!
இதுவும் அது. 2
353
எரிக் கொடி கவைஇய செவ் வரை போலச்
சுடர்ப் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம்
நீ இனிது முயங்க, வந்தனர்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.
இதுவும் அது. 3
354
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை
மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன் வந்தனரே
தெரிஇழை அரிவை! நின் பண்பு தர விரைந்தே.
இதுவும் அது. 4
355
திருந்துஇழை அரிவை! நின் நலம் உள்ளி,
'அருஞ் செயல் பொருள்பிணி பெருந் திரு உறுக!' எனச்
சொல்லாது பெயர் தந்தேனே பல் பொறிச்
சிறு கண் யானை திரிதரும்
5
நெறி விலங்கு அதர கானத்தானே.
நினைந்த எல்லையளவும் பொருள் முற்றி நில்லாது, பெற்ற பொருள் கொண்டு, தலைவியை நினைந்து, மீண்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 5
356
உள்ளுதற்கு இனியமன்ற செல்வர்
யானை பிணித்த பொன் புனை கயிற்றின்,
ஒள் எரி மேய்ந்த சுரத்திடை
உள்ளம் வாங்க, தந்த நின் குணனே.
வினை முற்றி மீண்டு வந்த தலைமகன் தலைவிக்கு அவள் குணம் புகழ்ந்து கூறியது. 6
357
குரவம் மலர, மரவம் பூப்ப,
சுரன் அணி கொண்ட கானம் காணூஉ,
'அழுங்குக, செய்பொருள் செலவு!' என விரும்பி, நின்
அம் கலிழ் மாமை கவின
5
வந்தனர் தோழி! நம் காதலோரே.
பொருள்வயிற் பிரிந்து ஆண்டு உறைகின்ற தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, கடிதின் மீண்டு வந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 7
358
கோடு உயர் பல் மலை இறந்தனர் ஆயினும்,
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து,
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி,
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே?
தலைமகள் ஆற்றாமை கண்டு பிரிந்த தலைமகன் வந்தனனாகத் தோழி சொல்லியது. 8
359
அரும் பொருள் வேட்கையம் ஆகி, நிற் துறந்து,
பெருங் கல் அதரிடைப் பிரிந்த காலைத்
தவ நனி நெடிய ஆயின; இனியே,
அணியிழை உள்ளி யாம் வருதலின்
5
நணிய ஆயின சுரத்திடை ஆறே.
மீண்டு வந்த தலைமகன் அவளைப் பிரிகின்ற காலத்துச் சுரத்துச் சேய்மையும், வருகின்ற காலத்து அதன் அணிமையும், கூறியது. 9
360
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை
அரிய ஆயினும், எளிய அன்றே
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி,
கடு மான் திண் தேர் கடைஇ,
5
நெடு மான் நோக்கி! நின் உள்ளி யாம் வரவே!
வினைமுற்றி மீண்டு வந்த தலைமகன், 'சுரத்து அருமை நோக்காது வந்தவாறு என்னை?' என வினவிய தலைமகட்குச் சொல்லியது. 10
உரை
HOME
Tags :
l1230136
பார்வை 87
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:54:44(இந்திய நேரம்)
Legacy Page