Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
சான்றிதழ்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சி
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
பழைய பாடத்திட்டம்
பாடங்கள்
சான்றிதழ்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சி
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பழைய பாடத்திட்டம்
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
பிற
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
பிழை செய்தி
Warning
: Attempt to assign property 'dir' of non-object in
template_preprocess_html()
(line
2629
of
/html/tamilvu/public_html/includes/theme.inc
).
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
அம்மூவனார்
அம்மூவனார்
Primary tabs
பார்
(active tab)
What links here
பாடினோர் பகுதி
அம்மூவனார்
10. நெய்தல்
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
5
நெய்தல் உண்கண் பைதல கலுழ,
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
10
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார்
உரை
140. நெய்தல்
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
5
கதழ் கோல் உமணர் காதல் மடமகள்
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய
10
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி,
15
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார்
உரை
280. நெய்தல்
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
5
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
10
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின்,
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், - அம்மூவனார்
உரை
370. நெய்தல்
'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ,
இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று;
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல்,
பகலே எம்மொடு ஆடி, இரவே,
5
காயல் வேய்ந்த தேயா நல் இல்
நோயொடு வைகுதிஆயின், நுந்தை
அருங் கடிப் படுவலும்' என்றி; மற்று, 'நீ
செல்லல்' என்றலும் ஆற்றாய்; 'செலினே,
வாழலென்' என்றி, ஆயின்; ஞாழல்
10
வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல்
தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி,
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு,
நீயே கானல் ஒழிய, யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து,
15
ஆடு மகள் போலப் பெயர்தல்
ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே!
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -அம்மூவனார்
உரை
390. நெய்தல்
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,
அதர் படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக்
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ?
5
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள,
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி,
' ''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும்,
10
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின்
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்' என,
சிறிய விலங்கினமாக, பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி,
'யாரீரோ, எம் விலங்கியீஇர்?' என,
15
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
சில் நிரை வால் வளைப் பொலிந்த
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே!
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - அம்மூவனார்
உரை
மேல்
Tags :
அம்மூவனார்
பார்வை 227
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 14:38:51(இந்திய நேரம்)
Legacy Page