Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பாடங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பிற
புதிய பாடத்திட்டம் 2022
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
மூதில் முல்லை
மூதில் முல்லை
Primary tabs
பார்
(active tab)
What links here
முகப்பு
மூதில் முல்லை
279
கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதில் மகளிர் ஆதல் தகுமே:
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே;
5
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே;
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ,
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
10
ஒரு மகன் அல்லது இல்லோள்,
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே!
திணை வாகை; துறை மூதில் முல்லை.
ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.
உரை
288
மண் கொள வரிந்த வைந் நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க,
5
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,
நெடு வேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை ...................................... மன்ற
குருதியொடு துயல்வரு மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.
திணை தும்பை; துறை மூதில் முல்லை.
கழாத்தலையார் பாடியது.
உரை
306
களிறு பொரக் கலங்கு, கழல் முள் வேலி,
அரிது உண் கூவல், அம் குடிச் சீறூர்
ஒலி மென் கூந்தல் ஒள் நுதல் அரிவை
நடுகல் கை தொழுது பரவும், ஒடியாது;
5
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்னையும்
ஒ ... ... ... ... ... ... ...வேந்தனொடு
நாடுதரு விழுப் பகை எய்துக எனவே.
திணை அது; துறை மூதில் முல்லை.
அள்ளூர் நன்முல்லையார் பாடியது.
உரை
308
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்,
மின் நேர் பச்சை, மிஞிற்றுக் குரல் சீறியாழ்
நன்மை நிறைந்த நய வரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
5
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே;
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை
சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே;
உளம் கழி சுடர்ப் படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
10
புன் தலை மடப் பிடி நாண,
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே.
திணை வாகை; துறை மூதில் முல்லை.
கோவூர் கிழார் பாடியது.
உரை
312
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
5
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
திணை வாகை; துறை மூதில்முல்லை.
பொன்முடியார் பாடியது.
உரை
326
ஊர் முது வேலிப் பார் நடை வெருகின்
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை
உயிர் நடுக்குற்றுப் புலா விட்டு அரற்ற,
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
5
பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து,
கவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும்
அரு மிளை இருக்கையதுவே மனைவியும்,
வேட்டச் சிறாஅர் சேண் புலம் படராது,
படப்பைக் கொண்ட குறுந் தாள் உடும்பின்
10
விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை,
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு
வரு விருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்,
அருஞ் சமம் ததையத் தாக்கி, பெருஞ் சமத்து
அண்ணல் யானை அணிந்த
15
பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே.
திணை வாகை; துறை மூதில் முல்லை.
தங்கால் பொற்கொல்லனார் பாடியது.
உரை
327
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில் விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
5
ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச்
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி,
வரகு கடன் இரக்கும் நெடுந் தகை
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே.
திணையும் துறையும் அவை.
..............................................................
உரை
328
..........டை முதல் புறவு சேர்ந்திருந்த
புன் புலச் சீறூர், நெல் விளையாதே;
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
5
................. டு அமைந்தனனே;
அன்னன் ஆயினும், பாண! நன்றும்
வெள்ளத்திடும் பாலுள் உறை தொட....
களவுப் புளி அன்ன விளை....
..............வாடு ஊன் கொழுங் குறை
10
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு,
துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு
உண்டு, இனிது இருந்த பின்
... ... ... ... .... ... தருகுவன் மாதோ
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை
15
முயல் வந்து கறிக்கும் முன்றில்,
சீறூர் மன்னனைப் பாடினை செலினே.
திணையும் துறையும் அவை.
பங்கு ............................. பாடியது.
உரை
329
இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடு கல்லின் நாட் பலி ஊட்டி,
நல் நீராட்டி, நெய்ந் நறைக் கொளீஇய,
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும்,
5
அரு முனை இருக்கைத்துஆயினும், வரி மிடற்று
அரவு உறை புற்றத்து அற்றே நாளும்
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை,
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே.
திணையும் துறையும் அவை.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.
உரை
330
வேந்துடைத் தானை முனை கெட நெரிதர,
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி,
தன் இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு
ஆழி அனையன்மாதோ என்றும்
5
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மையோனே.
திணையும் துறையும் அவை.
மதுரைக் கணக்காயனார் பாடியது.
உரை
331
கல் அறுத்து இயற்றிய வல் உவர்க் கூவல்,
வில் ஏர் வாழ்க்கை, சீறூர் மதவலி
நனி நல்கூர்ந்தனன்ஆயினும், பனி மிக,
புல்லென் மாலைச் சிறு தீ ஞெலியும்
5
கல்லா இடையன் போல, குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்லன்; உள்ளது
தவச் சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள்,
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும்
இல் பொலி மகடூஉப் போல, சிற் சில
10
வரிசையின் அளிக்கவும் வல்லன்; உரிதினின்
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகு பலி வெண் சோறு போலத்
தூவவும் வல்லன், அவன் தூவுங்காலே.
திணையும் துறையும் அவை.
உறையூர் முது கூத்தனார் பாடியது.
உரை
332
பிறர் வேல் போலாதாகி, இவ் ஊர்
மறவன் வேலோ பெருந் தகை உடைத்தே;
இரும் புறம் நீறும் ஆடி, கலந்து இடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
5
மங்கல மகளிரொடு மாலை சூட்டி,
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப,
தெண் நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,
மண் முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,
இருங் கடல் தானை வேந்தர்
10
பெருங் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.
திணையும் துறையும் அவை.
விரியூர் நக்கனார் பாடியது.
உரை
333
நீருள் பட்ட மாரிப் பேர் உறை
மொக்குள் அன்ன பொகுட்டு விழிக் கண்ண,
உள் ஊர்க் குறும் புதல் துள்ளுவன உகளும்
5
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்,
'உண்க' என உணரா உயவிற்று ஆயினும்,
தங்கினிர் சென்மோ, புலவிர்! நன்றும்;
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
10
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென,
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின்,
குரல் உணங்கு விதைத் தினை உரல் வாய்ப் பெய்து,
சிறிது புறப்பட்டன்றோ இலளே; தன் ஊர்
வேட்டக் குடிதொறும் கூட்டு
15
.............................................. உடும்பு செய்
பாணி நெடுந் தேர் வல்லரோடு ஊரா,
வம்பு அணி யானை வேந்து தலைவரினும்,
உண்பது மன்னும் அதுவே;
பரிசில் மன்னும், குருசில் கொண்டதுவே.
திணையும் துறையும் அவை.
.................................................................
உரை
334
காமரு பழனக் கண்பின் அன்ன
தூ மயிர்க் குறுந் தாள் நெடுஞ் செவிக் குறு முயல்,
புன் தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்பு ஒடுங்கும்மே ........... பின்பு
5
..................... ன் ஊரே மனையோள்
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே;
உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த
பொலம் .............................. ப்
10
பரிசில் பரிசிலர்க்கு ஈய,
உரவு வேல் காளையும் கை தூவானே.
திணையும் துறையும் அவை.
மதுரைத் தமிழக் கூத்தனார் பாடியது.
உரை
335
அடல் அருந் துப்பின்....................
...................குருந்தே முல்லை என்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே,
5
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு,
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந் நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி,
10
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென,
கல்லே பரவின் அல்லது,
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
திணையும் துறையும் அவை.
மாங்குடி கிழார் பாடியது.
உரை
Tags :
மூதில் முல்லை
பார்வை 836
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:35:01(இந்திய நேரம்)
Legacy Page