தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


- 57 -

தொல்லை நம் பிறவி யெண்ணிற் றொடுகடல்மணலுமாற்றா‘ என்று (சீவக 270) கூறியதனோடு ஒப்பிடத்தகும். பதேசம்-பிரதேசம்; வடமொழித்திரிபு. மறுபடி துண்டு செய்ய முடியாத ஓர் அளவின தாகிய அணு தங்கும் இடம் பிரதேசம் எனப்படும்.

‘ஜாவதியம் ஆயாஸம் அவிபாகி புக்கலாணு வட்டத்தம்
தம்கு பதேசம் ஜாணே ஸவ்வாணுட்டாண தாணரிஹம்‘

திரவ்ய சங்க்ரஹம். 71. காண்க. விட்டவை; பலவின்பால்வினையாலணையும் பெயர்.  மனித யாக்கையாகியவிட்டவை என இருபெயரொட்டும் ஆக்கலாம்.(35)

தேவகதி வரலாறு

40.
இருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி
 
வருசிலை யிருபத் தைந்தின் வந்துறு மங்க மெல்லாந
 
திருமலி தவத்திற் சென்று தேவர்தமுலகிற் பெற்ற(றோ.
 
தொருவரா லுரைக்க லாமோ வுலந்தன வனந்தமன்

(இ-ள்.) திருமலி - நல்வினைநிறையும், தவத்தின்-தவத்தினால், தேவர்தம் உலகில் சென்று - தேவருலகிற் சென்று, இருமுழம் ஆதியாக-(நவக்ரைவேயக தேவருடலின் உயரமான) இரண்டு முழம் முதலாக, எய்திய வகையின்-தாம் அடைந்த தேவ வகுப்பிற் கேற்ப, ஓங்கி வரு-உயர்ந்து வருகிறசிலை இருபத்தைந்தின் வந்து உறும்-(பவணதேவரின் உயரமான) இருபத்தைந்து வில்  லளவாக வந்து பொருந்தும், அங்கமெல்லாம் - யாக்கைஅனைத்தையும், பெற்றது - பெற்றதனை, ஒருவரால்-, உரைக்கலாமோ - (இத்துணையவென்று) அளவிட்டுக் கூற முடியுமோ? உலந்தன அனந்தமன்றோ - (நாம்) எடுத்துக்கழிந்தனவாகிய தேவவுடம்புகள் அனந்தமல்லவோ?

இரண்டு முழம் முதலாக இருபத்தைந்துவில் ஈறாக வுள்ள தேவப்பிறவிகளில் நாம் எடுத்துக்கழித்த யாக்கைகள் எண்ணற்றனவாகும் என்றானென்க.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:53:35(இந்திய நேரம்)