Primary tabs
ளிடத்திலும், அவற்றை யுடையாரிடத்திலும் வணக்கமாயிருத்தல், 7. தாம் கற்றவைகளைப் பிறருக்கு வஞ்சனையின்றிக் கற்பித்தல், 8 நற்குணவான்கள் தம்மை மன்னித்ததற்கேற்ப ஒழுகுதல் என எட்டுவிதமாகும்.
2. தரிசனாசாரம்;- 1. ஐயமின்மை - திருவறத்தை ஐயமின்றித் தெளிதல், 2. அவாவின்மை - பற்றின்றியிருத்தல், 3.உவர்ப்பு இன்மை - பரமாணுக் கூட்டங்களது தன்மையை உள்ளவாறு உணர்ந்து அருவருப்பு இன்றி இருத்தல், 4. மயக்கம் இன்மை - மூட்செய்கைகளில் மயங்கி நடவாதிருத்தல், 5. செய்பழி நீக்கல் - உலகோர் செய்த பழியை வெளியாகாவண்ணம் மறைத்தல், 6. திரிந்தாரை நிறுத்தல் - நீதியினின்றும் நழுவினைவரை முன்போல் நீதியில் நடக்கச் செய்தல், 7. அன்புடைமை - பெரியாரைக்காணின் கன்று கண்ட கறவை போல அன்புடனிருத்தல், 8. அறவிளக்கஞ் செய்தல் - திருவறத்தை யாவருக்கும் உபதேசித்தல் என எட்டுவிதமாகும்.
3. சாரித்ராசாரம்;-1. (ஒரறிவுமுதல் ஐயறிவுவரையிலுள்ள எவ்வுயிர்களையும்) கொல்லாமை, பொய்யாமை, களவின்மை, காமமின்மை. அகப்பற்று புறப்பற்று இன்மை ஆகிய மஹாவிரதம் ஐந்தும்; நடத்தல், பேசுதல், உணவு உட்கொள்ளல், பண்டங்கள் பொருள்கள் முதலியவைகளைச் சோதனை செய்து வைத்தல், எடு்த்தல், சிறுநீர் மலங் கழித்தல் முதலிய காலங்களில் பிறவுயிர்களுக்குத் துன்பம் நேராவண்ணம் மிதமாக நிகழ்வதாகிய சமிதி ஐந்தும்; தீய எண்ணமும், மொழியும், செயலும் இன்றி அடங்குவதாகிய குப்தி மூன்றும் என்கிற இப் பதின்மூன்றுமாகும். இதனை வடநூலார், பஞ்சமஹாவிரதம், பஞ்ச சமிதி, த்ரிகுப்தி என சாரித்ராசாரம் தர்யோதசவிதம் என்பர்.