தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 158 -

மேலாரணங்கனார் என்றது -மேன்மையுள்ள மகளிரை. இனி, ’ஆடவர் அன்றி -ஆண்மக்களேயல்லாமல், அணங்க னாரும்-மகளிரும், மேலார் அருவருத்து கூடலர்-கூடுதற்குரிய மேன்மைவாய்ந்த மணாளர்களை வெறுப்புற்றுக்கூடாதவர்களாகி,  எனலுமாம்.  நோன்மை -தவம் பெருமகள் என்றது, இகழ்ச்சிக்குறிப்பு; இனி, மூதேவி யெனலுமாம்.  கூடலர், முற்றெச்சம்.  குழலி, அரசி எனி்னும் ஆம்.                             (37)

110.
தனிவயி னிகுளை யானே தரப்படு சார னோடு
 
கனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து செல்நாள்1
 
முனிவினை மன்னன் றன்மேல் முறுகின ளொழுகு முன்போ
 
லினியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே..

(இ-ள்.) கனிபுரை கிளவி - கனிபோலும் இனிய சொற்களையுடைய அமிர்தமதி, இகுளையான் தரப்படும் -தோழியால் சேர்க்கப்படட், சாரனோடு-சோரமநாயகனோடு,காமம் கனிந்து-காதல் முதிரப்பெற்று,  தனிவயின்- தனியான இடத்தி்ல், கலந்தனன் -கூடிக் கலந்து, செல்நாள் -ஒழுகுகின்ற காலத்தில், மன்னன்-அரசன் தன்மேல்முறுகினள்-(கணவனாகிய) தன்மீது (காதலின்றி) சினமுடையவளாய், ஒழுகும்-ஒழுகுகின்றாள்; முன்போல்-பழையபடி, இனியவள் அல்லள்-இனியவளாய் இருக்கவில்லை; முனி வினை என்கொல்-வெறுத்தற்கு (க்காரணமாகிய) செயல் யாதோ? என-என்று, மனத்து எண்ணினான்-தன்மனத்தில் சிந்தித்தான்; (எ-று.)

கனிபுரை கிளவி சாரனோடு கலந்து செல்லுங்கால், அரசன் ‘என்மீது விருப்பின்றி நடக்கின்றாள். இதற்குக் காரணம் யாது?‘ என்று எண்ணினா னென்க.

கலந்தனள், முறுகினள் என்பன முற்றெச்சங்கள்; அவைமுறையே செல்நாள், ஒழுகும் என்ற வினைகளைக் கொண்டு முடிந்தன.  ‘முனி வினை மன்னன்‘ என்பதற்கு,

 

1 சென்றாள்.

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:10:04(இந்திய நேரம்)