Primary tabs
என்பதனோடு ஒப்பிடுக. அரையன், அரசன்; இடைப் போலி. இரை. தானாகக் கிடைத்த இரை யெனினுமாம். அவாவுதல், இச்சித்தல். (8)
(இ-ள்.) சந்திரமதி நாய்-(பூர்வம்) சந்திரமதியாய் இருந்து பிறந்த நாய், மாசனம் உண்ட பின் - மக்கள் உண்ட பிறகு, வந்து - (வெளியே) வந்து, குப்பையின் சிந்தும் எச்சில் - குப்பைகளின்மேல் எடுத்தெறியும்எச்சில் உணவு களை, சென்று - அங்குப்போய், கவர்ந்து தின்று - ஆவலுடன் கவ்வித் தின்று, அந்துளும் - அந்தப்புரத்திலும், அகழ் அங்கணத்து ஊடும் ஆய் -தோண்டப்பெற்ற ஜலதாரைகளின் இடையிலும், தளர்கின்றது - வருந்தி மெலிகின்றது.
சந்திரமதி, ஈண்டு நாயாகி எச்சில் உண்டு சாக்கடை முதலிய இடங்களில் தங்கி மெலிகின்ற தென்க.
சந்திரம்மதி, விகாரம். அந்த; உள் - அந்துள் என்றாயது போலும், அங்கணம் - ராஜாங்கணம் எனவுமாம்.* (9)
(இ-ள்.) (யசோதர மன்னனும் தாயும்), நல்வதத்தொடு அறத்திறம் நண்ணலார் - சிறந்த விரதத்தோடு சீலம் முதலியவைகளை ஏலாதாராகி, முன்-முன்னம், கொல்வதற்கு உளம் செய் கொடுமையான் - பலியிட மனத்தால் நினைத்த தீவினையால், ஒல்வதற்கு அரும் - பொருந்துதற்கரிய, மாதுயர் உற்றனர் - மிக்க துயரம் உற்றனர், (ஆதலின்), வினையின்
1 அந்துணும்.
* ஸ்ரீ புராணம்,