Primary tabs
மயில் மடிந்த காரணம் அறியாத யசோமதி நாயைக் கொன்றா னென்க.
இனி, பொன்றின மன்னவன் ஆயுமாறு அறியாத என்று நேரே கொண்டு பொருள் கூறவுமாம். இப்பொருளில், மன்னவன் - மன்னவனை என்க. போற்றின மன்னவன் என்ற பாடத்திற்கு, நாயை இரட்சித்த மன்னவன் என்று பொருள் கொள்க. ‘நாய் பெய் பலகை‘; நாய், சூதாடுகாய். பலகை - சூதாடு பலகை. (15)
யசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்
(இ-ள்.) மன்னன் மாமயில் வந்து - மன்னனாயிருந்த மயில் (இறந்து) மீண்டும் வந்து, விந்தக் கிரி துன்னுஞ் சூழலுள் - விந்த்யகிரியைச் சார்ந்த நெருங்கிய மலைச் சாரலில், இன்னல் செய்யும்-(பிற உயிர்களுக்குத்) தீங்கு செய்யும், சூழ்மயிர் முள்ளுடை - (உடல்) முழுவதும் முள்மயிருடைய, ஓர் ரனமது ஆகியது - ஒரு பன்றியாய்ப் பிறந்தது; அருவினையின் பயன் - விலக்குதற்கரிய தீவினையின் பலன், அன்னது ஆகும் - அத்தன்மையதாகும். (எ-று.)
மயில், மறு பிறப்பில் முள்ளம்பன்றி யாயிற்றென்க.
கிரி - மலை. துன்னுஞ்சூழல், மரங்கள் சூழ்ந்து நெருங்கியுள்ள இடம். ‘சூழ்மயிர் முள்ளுடை ஏனம்‘ எனவே, முள்ளம்பன்றி யாயிற்று. ஏனம் - பன்றி. (16)
(இ-ள்.) சந்திர மதி நாயும் - சந்திரமதியாகிய நாயும், அச்சாரலின் வந்து - அவ் விந்த்யமலைச் சாரலில