தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium




- 212 -

அரசன் ஆணையால், முதலையைப் பலர் பலவாறு துன்புறுத்திக் கொன்றனரென்க.

சலாகை - இருப்புக்கோல்.  அலை, முதல்நிலைத் தொழிற் பெயர்.      (22)

சந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்

177. 
சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
 
வந்து வார்வலைப் பட்ட கராமரித
 
தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய்
 
வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே.

(இ-ள்.) சந்திரமதி - சந்திரமதி, நாய் - நாயும், கருநாகம்ஆய் - கரும்பாம்புமாய்ப் பிறந்து, வந்து - (பின்பு இவ்வாற்றில்) வந்து பிறந்து, வார் வலைப் பட்ட - நீண்ட வலையிலகப்பட்ட, கார - முதலை, மரித்து - இறந்து, அந்தில் வாழ் - அவ்வுஞ்சயினியில் வாழும், புலையாளர் சேரிவாய் வந்து - புலையர்சேரியில் வந்து, ஓர் ஆட்டின் மடப்பிணை ஆயது - ஓர் ஆட்டின் வயிற்றில் பெண்ஆடாய்ப் பிறந்தது.

நாயும் பாம்பும் முதலையுமான சந்திரமதியின் உயிர் சேரியில் பெண்ணாடாய்ப் பிறந்த தென்க.

பிணை - ஆடு முதலியவற்றின் பெண்.  மடம், இளமை, ஆடு, யாடு என்பதன் மரூஉ.  தம், சாரியை.  (தொல். எழுத். 191).                     (23)

178.
மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை
 
அற்ற மில்லரு ளந்தணர் கண்டனர்
 
கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக்
 
குற்ற செய்கைக் குரித்தென வோதினார்.

 (இ-ள்.) மற்றை மீனும் - அந்த உலோகிதம் என்னும் மீனும், ஓர் வார் வலை பட்டதை - நீண்டதொரு வலையில் அகப்பட்டதை, அற்றம் - அச்சமயத்தில், அருள் இல் அந்தணர் கண்டனர் - அருள் இல்லாத சில அந்தணர்கள் கண்டு, (அரசனை யடைந்து), கொற்றம் மன்னவ - வெற்றி வேந்தே, நின் குலத்தார்களுக்கு - உன் குலத்து முன்னோர்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:18:53(இந்திய நேரம்)