தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 236 -

கொலோ - மகிழ்ந்த பலன்தானோ!    பாவி நின் உரு - பாவியாகிய நின் உருவம், இன்னணம் ஆயது - (தொழு நோயால்)  இவ்விதம் மாறியது; பாவி - பாவியே, என்னையும் இன்னணம் பற்றினை - என்னையும் இவ்விதம் வதைக்கப்பிடித்தனை.

ஆடு, தேவியே நீ பாகனால் நோயுற்று இப்பொழுது என்னையும் கொல்லக் கொணர்வித்தாயே யென்றதென்க.

முனிந்தனை, முற்றெச்சம், இன்னவண்ணம் என்பது இன்னணம் என்று மருவிற்று.  பாவி என்னையும் என்பதற்கு, பாவியாகிய என்னையும் என்றும் பொருள் கூறலாம்.

215. 
நஞ்சி லன்னையோ டென்னை நலிந்தனை
 
எஞ்ச லில்சின மின்ன மிறந்திலை
 
வஞ்ச னைமட வாய்மயி டம்மது
 
துஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ.

    (இ-ள்.) வஞ்சனை மடவாய் - வஞ்சகமுள்ள இளையோய், அன்னையோடு என்னை - என் தாயோடு என்னையும், நஞ்சில் நலிந்தனை - விஷத்தால் மடித்தாய்;  எஞ்சல் இல்சினம் - குறைதலில்லாத நின் செற்றம், இன்னம் இறந்திலை - இன்னமும் விட்டாய் இல்லை; மயிடம் அது துஞ்சும் நின்வயிற்று - எருமையின் தசை தங்கியிருக்கும் நினது வயிற்றுள், என்னையும் சூழ்தியோ - என்னையும் சேர்க்க ஆலோசனை செய்கின்றாயோ! (எ-று.)

    முன்னைப்போல் மீண்டும் மடிக்கக் கருதுகின்றனையோ என்று ஆடு எண்ணிற்றென்க.

இறத்தல் - கடத்தல்; விடுதல்.  சூழ்தல், கருதுதல். துஞ்சுதல் - தங்குதல்; ‘வலி துஞ்சு தடக்கை‘ என்பதுபுறம்.  யசோதரனாகிய ஆடு சேடியர்கூற்றால், அரசி எருமையூனை உண்டதனை அறிந்து கூறிற்றென்க.                    (61)

216. 
என்று கண்ட மொறுமொறுத் தென்செயும்
 
நின்று நெஞ்சம துள்சுட நின்றது
 
அன்று தேவி யலைப்ப வழிந்துயிர்
 
சென்ற தம்மயி டத்தொடு செல்கதி.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:22:49(இந்திய நேரம்)