தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 237 -

(இ-ள்.) என்று கண்டு - என்றிவ்வாறு நினைத்து (அரசியைக்) கண்டு, மொறு மொறுத்து நின்று - மொறுமொறு என்று  சத்தமிட்டுக்கொண்டுஇருந்து,  என்செயும் - என்ன செய்யும், (அதனால் அவ்யாடு), நெஞ்சம் அது உள்சுட - (அரசியின் செயல்) தன் மனத்தினுள் வெதுப்ப, நின்றது - (அவ்விடத்தே) நின்றது;  அன்று - அப்பொழுதே, தேவி அலைப்ப - அரசி கொல்விக்க, அழிந்து - இறந்து, உயிர் - அதன் உயிர், அம்மயிடத்தொடு -முன் இறந்த அந்த எருமையோடு, செல்கதி சென்றது-தான்போய்ப் பிறத்தற்குரிய கதியிற் சென்றது. (எ-று.)

தகர் இறந்து எருமையுடன் வேறுகதி யடைந்ததென்க.

மொறு மொறுத்தல், ஒலிக்குறிப்பு. மொறுமொறுக்கலாமே தவிர வேறு என்ன செய்ய முடியும் என்பதற்கு, ‘என் செயும்‘ என்றார்.           (62)

எருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்

217. 
மற்றம் மாநகரத்து மருங்கினில்
 
சிற்றில் பல்சனஞ் சேர்புறச் சேரியின்
 
உற்று வாரணப் புள்ளுரு வாயின
 
வெற்றி வேலவன் கண்டு விரும்பினான்.

(இ-ள்.) (அவை), மற்று -மீண்டும், அம் மாநகரதுத்து - அவ்வுஞ்சயினி மா நகரத்தின், மருங்கினில் - பக்கத்தேயுள்ள. சிற்றில் பல்சனஞ்சேர் புறச்சேரியில் - சிறுவீடுகளில் பல மக்கள் குழுமி வாழும் புறச்சேரியில், உற்று - (கோழியின் கருவில்) அடைந்து, வாரணப் புள் உருவு ஆயின - கோழிகளாயின (அவற்றை), வெற்றிவேலவன்-வெற்றி தரும் வேல்வீரனாகிய யசோமதி, கண்டு - (வினையின் தொடர்பால்) கண்டு, விரும்பினான் - --. (எ-று.)

எருமையும் ஆடுமாகிய உயிர்கள் அந்நகரப் புறச்சேரியில் கோழிகளாயின;  அவ்விரண்டையும் யசோமதி கண்டுவிரும்பினானென்க.  பறைச்சேரி என்றும் பாடம்.            (63)




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:22:58(இந்திய நேரம்)