Primary tabs
(இ-ள்.) மன்னவன் - யசோமதி, கண்டு - (கோழிகளிரண்டையும்) கண்டு, கண் களிகொண்டனன் - கண் களி கூர்ந்தவனாகி, சண்டகன்மியைத் தந்து - தளவரனாகியசண்ட கருமனை வருவித்து (அவனிடம்), வளர்க்க என-(இந்தக் கோழிகளை) வளர்ப்பாயாக என்று பணிக்க, அவன் - அந்தச் சண்ட கருமன், கொண்டுபோய் - (அவற்றைக்) கொண்டுபோய், கூட்டுள் வளர்த்தனன் - கூட்டில் வைத்து வளர்த்து வரலானான் (அவ்விரு கோழிகளும்), மண்டு போர் வினை - மிக்குச் செல்கின்ற போர்த்தொழிலில், வல்லவும் ஆய - திறமையுடையனவும் ஆயின. (எ-று.)
கோழிகள் சண்டகருமனிடம் வளர்ந்து போர்த் தொழிலில் திறமை பெற்றன வென்க. (64)
(இ-ள்.) தரளமாகிய நயனத்தொடு - சலிப்பனவாகியகண்களும், சாபம்போல் அம் சிறை - இந்திரதனுசைப் போன்ற அழகிய சிறைகளும், மணிமுடிதனை யொத்த சுடர்சிகை - மாணிக்கமணி யிழைத்த முடிபோ லொளிரும் கொண்டையும், ஒளிரும் பொன் உகிர் சரணங்கள் - விளங்குகின்ற பொன்போன்ற நகங்களையுடைய கால்களும், வயிரமுள் - வயிரம் போலும் முள்ளும் உடையனவாய், ஒப்புஇல போரின்கண் - போர்த்தொழிலில் நிகரில்லாதனவாய், தளர்வு இல்வீரியம் - குன்றாத வீரியமும் அடைந்து, தகைபெற - அழகு உற,
1 சுடர்க்கண.
2 பொன்னன்.