Primary tabs
ருசியும் அபயமதியும்), மாற்றிடை சுழன்ற பெற்றி - (பல) பிறவியில் உழன்ற தன்மையை, சிந்தையில் நினைந்து நொந்து - மனத்தில் எண்ணி வருந்தி, தேம்பினர் புலம்ப- விம்மியழுது புலம்ப, கண்டு - பார்த்து, கொந்து எரிஅழலுள் வீழ்ந்த கொள்கையன் ஆனான் - மூண்டு எரிகின்ற தீயில் வீழ்ந்த செயலையுடையனாயினான். (எ-று.)
தம் மக்கள் பழம்பிறப்புணர்ந்து வருந்துதலைக் கண்ட அரசன் மிக்க துயரெய்தினானென்க.
முக்திக்கு மாறாகியது, ‘மாற்று‘ (பிறவி) எனப்படும்.
(இ-ள்.) எந்தையும் எந்தை தாயும் எய்திய - என் தந்தையும் அவன் தாயும் அடைந்த, பிறவிதோறும் - மயில் முதலிய ஒவ்வொரு பிறவியிலும், வெம் துயர் விளைவுசெய்த-(அவர்களுக்குக்) கொடுந்துன்பஞ்செய்த, வினையினேன் -தீவினையாளனாகிய யான், என்செய்கேனோ - உய்வதற்குயாது செய்வேன் ! அந்தம் இல் உயிர்கள் - எண்ணுதற்கு முடியாத பிராணிகள், மாய - மடிய, நாளும் - எந்நாளும், அலை பல செய்து - கொலை முதலிய பல தீயசெயல் புரிந்து, வெம் துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தேன் - கொடிய துன்பம்தரும் நரகத்தில் வீழ்த்தும் தீவினைகள் செய்தயான், என் செய்கேனோ - இனி யென்செய்வேனோ ! (எ-று.)
யசோமதி தன் செயலைக் குறித்து வருந்தினானென்க.
எந்தை - என்தந்தை. நாய், மீன் முதலிய பிறவிகளில் துன்புறுத்தியதனை நினைத்து, ‘எந்தையும்... வினையினேன்‘ என்றான். அலைத்தல் - வருத்துதல். தான்செய்த தீவினை நரகத்திற்கேதுவாகு மென்று எண்ணி மிகவருந்தினான்.