தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

திருநாளைப்போவார் நாயனார்

நன்மைதிகழ் மேற்காநாட் டாத னூர்வாழ்

நந்தனார், புறத்தொண்டர், “நாளைப் போகப்

பொன்மலிதென் புலியூர்க்“கென் றுரைப்பார், புன்கூர்ப்

பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி,

வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த

வண்டழலி னிடைமூழ்கி, மறையோர் போற்ற

மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து, நாதன்

விளங்குநடந் தொழமன்றுண் மேவினாரே.

21
திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
கொந்தலர்பூம் பொழிற்கச்சி நகரே காலிக்

குலத்தலைவர், தவர்குறிப்புக் குறித்து ளார்பால்

வந்திறைவர் “நமக்கின்று தாரீ ராகின்

வருந்துமுட“லென, வாங்கி மாசு நீத்த

கந்தைபுல ராதொழிய, மழையு மாலைக்

கடும்பொழுதும் வரக்கண்டு, கலங்கிக், கன்மேற்

சிந்தமுடி புடைப்பளவிற், றிருவே கம்பர்

திருக்கைகொடு பிடித்துயர்வான் சேர்த்தி னாரே.

22
சண்டேசுர நாயனார்
வேதமலி சேய்ஞலூ ரெச்ச தத்தன்

விளங்கியசேய், மறைபயிலும் விசார சன்மர்,

கோதனமேய்ப் பவன்கொடுமை பொறாது, தாமே

கொண்டுநிரை மண்ணியின்றென் கரையி னீழற்

றாதகியின் மணலிலிங்கத் தான்பா லாட்டத்,

தாதைபொறா தவையிடறுந் தாள்கண் மாளக்

காதி, மலர்த் தாம - முயர் நாம - முண்ட

கல - மகனாம் பத - மருளாற் கைக்கொண்ட டாரே.

23
திருநாவுக்கரசு நாயனார்
போற்றுதிரு வாழூரில் வேளாண் டொன்மைப்

பொருவில் 1கொறுக் கையரதிபர் புகழ னார்பான்

மாற்றருமன்பினிற் றிலக வதியா மாது

வந்துதித்த பின்புமரு ணீக்கி யாருந்

தோற்றி, யமண் சமயமுறு துயர நீங்கத்

துணைவாரு டரவந்த சூலை நோயாற்

பாற்றருநீ ளிடரெய்திப், பாடலிபுத் திரத்திற்

பாழியொழித், தரணதிகைப் பதியில் வந்தார்.

24
வந்து தமக் கையரருளா னீறு சாத்தி,

வண்டமிழா னோய்தீர்ந்து, வாக்கின் மன்னாய்,

வெந்தபொடி - விடம் - வேழம் - வேலை - நீந்தி,

வியன்சூலங், கொடியிடபம் விளங்கச் சாத்தி,

பா - ம் - 1 குறுக்கை.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 15:40:16(இந்திய நேரம்)