Primary tabs
இளம்பருவத்தில் இவர் சிற்றின்ப வேட்கை மிக்கு உழன்றதாகவும், அவ்வொழுக்க மிகுதியால் தொழுநோயுற்று அது பொறுக்கலாற்றாது வருந்தித் திருக்கருவைச் சிவபிரான்மீது மேற்குறித்த அந்தாதிகள் மூன்றையும் பாடித் துதிக்க, அவ்வளவில் அந் நோய் நீங்கப் பெற்றதாகவும் கூறுவர். ‘ஆறாக் காமக் கொடிய கனல் ஐவர் மூட்ட அவல மனம் நீறாய் வெந்து கிடப்பேனை’ என வரும் இந்நூல் இரண்டாவது செய்யுளும் இன்னோரன்ன பிற செய்யுட்கள் பலவும் மேற்கூறிய வரலாற்றை வலியுறுத்தும்.
இவருக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் சுவாமி நாததேவர் என்பதும், தீக்கை செய்த ஆசிரியர் அகோர சிவாசாரியார் என்பதும், தாம் இயற்றிய வேறு நூல்கள் சிலவற்றில் இவர் பாடிய குருவணக்கச் செய்யுள்களால் விளங்குகின்றன. காசிகண்டத்தில்,
மறிமானும் திண்டோ ளெட்டும்
உருக்கிளர்வெம் புலியதளும் கரந்துமா
னிடவடிவின் உலகிற் போந்து