தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


கையின் எய்திய தொன்றென்பதும் விளங்கிக் கிடக்கிறது. ஆதலின் இவர் நுண்ணுணர்வு சிறக்க வாய்ந்தவராவர். இவர் முதன் முதல் இயற்றிய நூல் நைடதம் எனவும் இறுதியில் இயற்றிய நூல் இத் திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி எனவும் கொள்ள அகச்சான்றுகள் உள்ளன. பெருக்கமஞ்சி அவற்றை விளங்க எடுத்துரைப்பதற்கில்லை. கூர்ந்து நோக்குவார்க்கு அவை நன்கு விளங்கும். கர்ண பரம்பரையாக வழங்கிவரும் அவரது வரலாறும் இக் கொள்கைக்கு இடந் தருகின்றது.

இளம்பருவத்தில் இவர் சிற்றின்ப வேட்கை மிக்கு உழன்றதாகவும், அவ்வொழுக்க மிகுதியால் தொழுநோயுற்று அது பொறுக்கலாற்றாது வருந்தித் திருக்கருவைச் சிவபிரான்மீது மேற்குறித்த அந்தாதிகள் மூன்றையும் பாடித் துதிக்க, அவ்வளவில் அந் நோய் நீங்கப் பெற்றதாகவும் கூறுவர். ‘ஆறாக் காமக் கொடிய கனல் ஐவர் மூட்ட அவல மனம் நீறாய் வெந்து கிடப்பேனை’ என வரும் இந்நூல் இரண்டாவது செய்யுளும் இன்னோரன்ன பிற செய்யுட்கள் பலவும் மேற்கூறிய வரலாற்றை வலியுறுத்தும்.

இவருக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் சுவாமி நாததேவர் என்பதும், தீக்கை செய்த ஆசிரியர் அகோர சிவாசாரியார் என்பதும், தாம் இயற்றிய வேறு நூல்கள் சிலவற்றில் இவர் பாடிய குருவணக்கச் செய்யுள்களால் விளங்குகின்றன. காசிகண்டத்தில்,

திருக்கிளர்வெண் பிறைக்கொழுந்தும் செஞ்சடையும்
      மறிமானும் திண்டோ ளெட்டும்
உருக்கிளர்வெம் புலியதளும் கரந்துமா
      னிடவடிவின் உலகிற் போந்து

 


புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 22:44:21(இந்திய நேரம்)