வெள்ளைத் தாமரை மீதினிலே
விளங்கும் தாயே வணங்குகிறேன்.
கள்ளம் கபடம் இல்லாமல்
கற்று நன்மை புரிந்திடவும்,
உள்ளும் புறமும் தூய்மையுடன்
உலகில் வாழ்ந்தே உயர்ந்திடவும்
அள்ளி அள்ளிக் கலைகளையே
அளிப்பாய் அறிவை வளர்ப்பாயே.
Tags :
பார்வை 74
புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:02:28(இந்திய நேரம்)