தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


கணபதி பூசை

வேண்டும் வரம் தரும் பிள்ளையாருக்குப் பூசை போடுவதற்கு கிராமப்பெண்கள் தயார் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல விளைச்சல், மங்கல வாழ்வு கொடுத்த பிள்ளையாருக்கு மங்களமாகப் பூசை போட அவர்கள் விரும்புகிறார்கள். நிலவு காயும் நேரத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து அவரைச் சுற்றிக் கும்மியடித்துப் பாடுகிறார்கள். கும்மியில் பிள்ளையார் பூசனைமுறை பற்றி பெண்கள் பாடுகிறார்கள்.

 

ஒரு மிளகாயாம்-ஏலேலோ
கணபதியாம்
ஒரு ஆயிரம் திருவிளக்காம்-ஏலேலோ
கணபதியாம்
திருவிளக்கு ஏலேலோ
கணபதியாம்
சிவனே என்று பொழுதெறங்க-ஏலேலோ
கணபதியாம்
பொழுதெறங்கும் வேளையிலே-ஏலேலோ
கணபதியாம்
பொங்கலுக்கு தண்ணி கொண்டு-ஏலேலோ
கணபதியாம்
நீராடி நீர் குளித்து-ஏலேலோ
கணபதியாம்
பட்டுடுத்தி பணியுடுத்தி-ஏலேலோ
கணபதியாம்
பதினெட்டு நெல் வகையும்-ஏலேலோ
கணபதியாம்
கொறித்தெடுப்போம்-ஏலேலோ
கணபதியாம்

சேகரித்தவர்:
கு. சின்னப் பாரதி

இடம்:
பரமத்தி, சேலம் மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:56:24(இந்திய நேரம்)