தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


அச்சு மட்டம்!

தீபாவளியன்று புதிது உடுத்தி முல்லைச்சரம் சூடி வெளியே வருகிறாள் பொன்னி. அவளின் முகம் காண வெளியே புத்தாடையணிந்து காத்திருக்கிறான். அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவனையும் தன்னையும் மனக்கண்ணில் சேர்த்து நிறுத்தி பொருத்தம் நோக்குகிறாள். அவள் முடிவு என்ன ? கேளுங்கள்.

(பெண் பாடுவது)

 
கொண்டைக்கு ஒத்த
கொல்லைப்பட்டி முல்லைச்சரம்
அவருக்கு ஒத்த
அச்சு மட்டம் நானலவோ ?
நாட்டுக்கு நாட்டு மட்டம்
நாமரெண்டும் சோடி மட்டம்
கார்ட்டுக்குப் போனாலும்
கோடி சனம் கையெடுக்கும்
கருப்புக்கு ஏத்த
கோயமுத்தூர் மல்பீசு
அவருக்கு ஏத்த
அச்சு மட்டம் நானல்லவோ ?

குறிப்பு: கோர்ட்-ஜனங்கள் கூடியிருக்கும் இடங்களுள் கோர்ட்டும் ஒன்று. கோயிலுக்கு என்று மேல் சாதிக்காரர்கள் பாடுவார்கள். ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு கோயிலில் நுழையும் உரிமை இல்லாதிருந்ததால் அவர்கள் பாட்டில் கோயில் பொதுவாக இடம் பெறுவதில்லை.

சேகரித்தவர்:
S.S. போத்தையா

இடம்:
நெல்லை மாவட்டம்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:11:54(இந்திய நேரம்)