தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


பாலன் முதல் வேண்டுமென்று
பாரத்தவம் செய்து
தொண்ணூறு நாளாகத்
துளசிக்கு நீர்வார்த்து
முன்னூறு நாளாக
முல்லைக்கு நீர் வார்த்து
ஐந்நூறு நாளாக
அரசுக்கு நீர் வார்த்து
வேண தவஞ் செய்து
வேம்புக்கு நீர் வார்த்து
வெந்த மாத்தின்றால்
விரதம் கலையுமிண்ணு
பச்சை மாத்திண்ணு
பகவானைப் பூசை செய்து
செம்பொன் மலரெடுத்துச்
சிவனாரைப் பூசை செய்து
பசும் பொன் மலரெடுத்து
பார்வதியைப் பூசை செய்து
வெள்ளை மலரெடுத்து
வினாயகரைப் பூசை செய்து
நவகிரகப் பூசை
நாயகியும் தான் செய்து
அன்னையும் தந்தையும்
அருந்தவங்கள் தான் செய்து
முந்தித் தவமிருந்து
முன்னூறு நாள் சுமந்து
மங்களமாக
மைந்தரைப் பெற்றெடுத்தாள்
மலரில் உதித்தவர்தான்
மா தவத்தால் வந்தவர்தான்
பூவில் உதித்தவர்தான்
புண்ணியத்தால் வந்தவர்தான்
தவத்தால் பிறந்தவர்தான்
தருமத்தால் வந்தவர்தான்
பிச்சிப் பூத் தொட்டிலிலே
புரண்ட குமாரர்தான்
மல்லிகைப் பூந் தொட்டிலிலே
வளர்ந்த குமாரர்தான்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:29:30(இந்திய நேரம்)