Primary tabs
அஷ்ட திக்கும் தானதிர
அடியுமென்றார் பேரணியை
அன்ன நடையோர்கள்
அருமைப் பெரியோர்கள்
பொன்னி வலக்கையாலே
பேழை முடி ஏந்தி நின்று
வண்ண வண்ணக் காட்சியர்க்கு
வரிசை கொண்டு வந்தோமென்று
நாட்டிலுள்ள சீர் சிறப்பை
நாட்டினார் முன்னிலையில்
கண்டு மகிழ்ந்தார்கள்
கண்குளிர யாவரும்
பூட்டு மென்றார் தாலியைப்
பெண்ணாள் திருக்கழுத்தில்
ஊட்டு மென்றார் சாதம்
உடுத்து மென்றார் பட்டாடை
சத்துச் சரப்பளியும்,
தங்கம் வெள்ளி பொன் நகையும்
மாணிக்கம் முத்து
வைடூரியம் திருப்பூட்டி
ஆணிப் பொன்னாபரணம்
அலங்கரித்துக் குலம் கோதி
அன்ன மயிலியர்க்கு
அழழு கொண்டை முடித்து விட்டு
பொன் பூட்ட வந்தோர்க்குப்
பூதக்கலம் அனுப்பிவைத்து
அன்பாக மாங்கல்யம்
அடவாகவே கொடுத்து
அத்தியார் சுத்தப்பட்டு
ஆனந்த நாராயணப்பாட்டு
மெச்சும் கலி வர்ணம்
மேகவர்ணம் தூவர்ணம்
பச்சை வர்ணம், பவளவர்ணம்
பலவர்ணக் கண்டாங்கி
மேலான வெள்ளைப்பட்டு
மேல் கட்டுங்கட்டி
கட்டியே இருக்கும்
கணபதி வாசலிலே