தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


அருமையுள்ள பந்தலிலே
அனைவரும் சூழ்ந்து நிற்க
பெருமையுள்ள பந்தலைப்
பூவால் அலங்கரித்தார்
நாள் கலசம் நட்டு
நல்ல முகூர்த்தமிட்டு
பேக் கரும்பை நட்டு
பெருமன்னம் போட்டு வைத்து
சாரும் கரகமும்
சந்திர சூரியரும்
அம்மி வலமாக
அரசாணி முன்பாக
ஆயிரம் பெருந்திரி
அதற்கும் வலமாக
போயிருந்தார்கள்
பெருமையுடன் வாழ்ந்திடுவோர்
சுத்தமுடன் கலம் விளக்கி
சோறரிசி பால் பழமும்
பத்தியுடன் தானருந்தப்
பணித்தார் மாமன்மாரை
அருந்தி முடித்தவுடன்
அருகு வந்து தாய்மாமன்
பொட்டிட்டுப் பூமுடித்தார்
பேடாம் மயிலையர்க்கு
பட்டமது கட்டினார்
பாரிலுள்ளோர் பார்த்திருக்க
கொத்து மாலையைக்
கொண்டையில் கட்டி
சித்திரக் கலசம்
நெற்றியில் துலங்க
அலங்கரித்த பெண்ணை
அலங்காரமாய் மாமன்
மணமகன் அருகில்
அழைத்து வந்தார்.
இராமர் இவரோ,
லட்சுமணர் இவரோ
காங்கேயன் இவரோ,
கருணீகர் இவரோ



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:32:29(இந்திய நேரம்)