Primary tabs
எனவே வியக்க
இருந்தவனிடத்தில்
மைத்துனனை அழைத்து
மணவறை இருத்தி
கலம் நிறை அரிசியில்
கையினைக் கோர்த்தார்
சிங்காரமாக தெய்வ
சபை தனிலே
கம்பர் குலம் வழங்கக்
கம்பர் சொன்ன வாக்கியங்கள்
வாக்கியத்தைத் தானடக்கி
மங்களங்கள் தான் பாட
அருமைப் பெரியோர்கள்
அருமை மனை செல்லலுற்றார்
கைக்குக் கட்டின
கங்கணமும் தானவிழ்த்தார்
தங்கள் தங்கத்தை
தாரை செய்து கொடுத்து
கைத்தாரை செய்த பின்பு இன்னார்
பரியம் தேதி செலுத்துவோமென்று
மண்டலமறிய
மணிவிளக்கு வைத்து
கரகம் இறக்கினார்
கன்னியுள்ள பாலனுக்கு
புடவை தனைப் போட்டு
பின்னும் தலைமுழுகி
மாமன் கொடுக்கும்
வரிசைகள் கேளாய்
காதுக் கடுக்கன்
வெள்ளிச் சரப்பளி
மோதிர கடகம்
அஷ்டக்கடகம்
தோள் வார் பசும்பொன்
துண்டுக் கடுக்கன்
அம்மி குளவி
அழகு சிறு செம்பு
கட்டில் மெத்தை
கன்றுடன் பால் பசுவும்