தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


போகுதையா பூந்தேரு
பூலோகம் தெத்தளிக்க
இண்டு மணக்குதையா
இடுகாடு பூமணக்கும்
வாயை மணக்குமையா
வைகுண்டம் பூமணக்கும்
இடு காடு தேரிறக்கி
எமலோகம் போறேனிண்ணார்
சுடுகாடு தேரிறக்கி
சொர்க்க லோகம் போறேனிண்ணார்
தேரை விட்டுக் கீழிறக்கி
செல்ல மக்கள் வந்து கூடி
பொன்னரசி கையிலெடுத்து
போட்டார்கள் வாய்க்கரிசி
சந்தனக் கட்டை வெட்டி
சதுருடனே தீ மூட்டி
கொள்ளி வச்சி குடமுடைச்சி
கோலவர்ணத் தேரவுத்து
செலவு தொகை தான் கொடுத்து
செல்ல மகன் தலைமுழுகி
சிவ சிவா என்று சொல்லி
திருநீறும் தானணிந்தார்.

குறிப்பு : இதில் சாவுச் சடங்குகள் வரிசையாகச் சொல்லப்படுகின்றன.

சேகரித்தவர் :
S.S. போத்தையா

இடம்:
விளாத்திக்குளம்,
நெல்லை மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:09:55(இந்திய நேரம்)