தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கலைத்தந்தை கருமுத்து தியாகராசர்க்கு
உரித்தாக்கல்

 

திருவார் பாண்டி நன்னாட்டில்

திகழும் தெற்கூர் பதிச்செல்வர்

தெய்வப் பற்றும் தமிழ்ப்பற்றும் 

சிற்பக் கலையிற் பெரும்பற்றும் 

உருவாய் வந்த அருங்கலைஞர்

உழைப்பால் ஆலை பலநிறுவி

உழைப்போர்க் கென்றும் வாழ்வளித்த

ஒப்பில் மதுரைத் தொழிலதிபர்

பெருகும் இளைஞர் நிலையுயரப்

பெரிய கலைக்கல் லூரிகளும்

பேணும் தொழில்நற் பள்ளிகளும்

பிறவும் அளித்த பெருவள்ளல்

திருத்த முறநற் றமிழ்வளர்த்த

சைவ சமயப் பேரறிஞர்

தியாக ராசர்க் கிந்நூலைச்

சிறப்பாய் உரித்தாக் கிடுவேனே.

அ.கி. பரந்தாமனார்.

  


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:43:09(இந்திய நேரம்)