Primary tabs

முன்னர்க் காட்டுதும். (11)
126. ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், எய்தாததெய்து வித்தல்
நுதலிற்று; ஐயமறுத்தது எனினும் அமையும்.
உரை :
மேற் சொல்லப்பட்ட நான்கல்லாப் புள்ளியீறு விளியேலா
உயர்திணைக்கண் என்றவாறு.
மற்று, ஆவனகூற அமையாதோ வெனின், ‘ஏனைப் புள்ளி யீறுவிளி
கொள்ளா’ என, இன்னும் மேற்கூறிய புள்ளி யீறு அவ்வாறன்றிப்
பிறவாறு விளியேற்றலுடைய என்றற்குக் கூறினார் என்பது.
வரலாறு :
பெண்டிர் - பெண்டிரே எனவும், தம்முன் - தம்முனே
எனவும் வரும். பிறவும் அன்ன. ஏனைப்புள்ளியும் ஆவதுண்டு.
‘விளங்குமணிக் கொடும்பூண் ஆய்’ என்பதும் [புறம் 130] பிறவும்
இவ்வாறு வருவன கொள்க. (12)
127. அன்னென் னிறுதி யாவா கும்மே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே
னகரவீறு விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : அன்
என்னும் பெயரிறுதி ஆவாய் விளியேற்கும்
என்றவாறு.
வரலாறு :
சோழன் - சோழா, சேர்ப்பன் - சேர்ப்பா என வரும்.
(13)
128. அண்மைச் சொல்லிற் ககரமு மாகும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், எய்தியது ஒரு மருங்கு
மறுத்தல் நுதலிற்று.
உரை :
அணியாரைக் கூவுமிடத்து அன் ஈறு திரிந்து அகரமாயும்
விளியேற்கும் என்றவாறு.
வரலாறு : ஊரன் - ஊர, சேர்ப்பன் - சேர்ப்ப என வரும். (14)
129. ஆனென் னிறுதி யியற்கை யாகும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் னகரவீறு
விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : ஆன் என் னகரவீறு இயல்பாய் விளியேற்கும் என்றவாறு.
வரலாறு :
சேரமான்,