Primary tabs

ம் என்றவாறு.
வழி என்பது இடம்.
வரலாறு:
எல்லாம் வந்தேம், எல்லாம் வந்தீர், எல்லாம் வந்தார்,
எல்லாம் வந்தன எனவரும். (32)
184.
தன்னு ளுறுத்த பன்மைக் கல்ல
துயர்திணை மருங்கி னாக்க மில்லை.
உரை : எல்லாம் என்னும் சொல் உயர்திணைக்கு ஆங்கால்
தன்மைப்பன்மைக்கல்லது முன்னிலைப் பன்மைக்கும் படர்க்கைப்
பன்மைக்கும் ஆகாது என்றவாறு
‘ஆக்கமில்லை’ எனவே சிறுபான்மை வரப்பெறும். ()
185.
நீயிர் நீயென வரூஉங் கிளவி
பாறெரி பிலவே யுடன்மொழிப் பொருள.
உரை: நீயிர் நீ என்னும் இரண்டு பெயர்ச்சொல்லும் திணைப்பகுதி
தெரிய நில்லா; இருதிணையும் உடன்றோன்றும் பொருள என்றவாறு.
நீயிர் வந்தீர், நீ வந்தாய் என இரு திணைக்கும் பொதுவாய்
நின்றவாறு கண்டுகொள்க. (34)
186.
அவற்றுள்
நீயென் கிளவி யொருமைக் குரித்தே.
உரை : மேற் சொல்லப்பட்ட இரண்டு பெயருள் நீ என்னும் பெயர்
ஒருமைக்கு உரித்து என்றவாறு.
ஒருமையாவது : ஒருவன், ஒருத்தி, ஒன்று என்பனவற்றிற்கெல்லாம்
பொதுவாகிய ஒருமை.
நீ வந்தாய் எனக் கண்டுகொள்க. (35)
187. ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே
உரை : நீயிர் என்னும் பெயர் பன்மைக்கு உரித்து என்றவாறு.
பன்மை யாவது :பல்லோர்க்கும் பலவற்றிற்கும் பொதுவாகிய
பன்மை.
நீயிர் வந்தீர் எனக் கண்டுகொள்க. (36)
188.
ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி
யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை.
உரை : ஒருவர் என்னும் பெயர்ச்சொல் உயர்திணைப் பாலுள்ஒருபால் விளக்கா ; ஒருவன், ஒருத்தி என்னும் இருபாற்கும் பொதுவாய்
நிற்கும் என்றவாறு.
வரலாறு : ஒருவர் வந்தார் என்பது, பொதுவாய் நின்றவாறு