தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1273


ம் ஓரளபாம் என்றவாறு. 

வரலாறு:  

‘கடல்போற் றோன்றல காடிறந் தோரே’ [அகம்-1]

என வரும். 

உம்மை எதிர்மறையாகலின் குறையாது நிற்றலே பெரும்பான்மை.  
                                                       (38)

282. உம்மை யெண்ணு மெனவெ னெண்ணுந்
தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே.

வரலாறு:  

‘நிலனும் நீரும் தீயும் வளியும் வெளியும் நல்ல’

எனினும் அமையும்; தொகை கொடுத்து எண்ணினும் ஆம். 

எனவென்  எண்ணிற்கும்  தொகை கொடுத்தும்கொடாதும்  சொல்லி
உம்மையெண்போல ஒட்டிக்கொள்க. (39) 

283. எண்ணே கார மிடையிட்டுக் கொளினு
மெண்ணுக்குறித் தியலு மென்மனார் புலவர். 

உரை:    எண்ணேகாரம்   இடை  நின்று  ஒழிந்த   எண்ணால்
வந்தனவற்றையும், ஏகாரவெண்ணால் எண்ணினவே என்றவாறு. 

ஏகாரம்  எண்ணிடையே  நின்றது  எனினும்,   எண்ணி  வருகின்ற
எண்ணேயாம் என்றுமாம் எனக் கொள்க. 

வரலாறு:  

‘தோற்ற மிசையே நாற்றஞ் சுவையே
உறலோ டாங்கைம் புலனென மொழிப’ 

இதனுள்,  செவ்வெண்  ஓடாநின்றே ஏகாரவெண் இடையே புகுந்தவாறு
கண்டுகொள்க. (40) 

284. உம்மை தொக்க வெனாவென் கிளவியு
மாவீ றாகிய வென்றென் கிளவியு
மாயிரு கிளவியு மெண்ணுவழிப் பட்டன. 

வரலாறு:  

உம்மைதொக்க எனா என் கிளவி வருமாறு: 

‘நிலனொனா, நீரெனா, தீயெனா, காலெனா’ என வரும். 

ஆவீறாகிய என்றென் கிளவி: 

‘நிலனென்றா, நீரென்றா, தீயென்றா, வளியென்றா’ என வரும். (41) 

285. அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும்
பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியு
மேயி னாகிய வெண்ணி னிறுதியும்
யாவயின் வரினுந் தொகையின் றியலா.

வரலாறு: 

எனா: ‘சாத்தனெனா, கொற்ற
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:33:51(இந்திய நேரம்)