Primary tabs

‘வாள்வாய் கடிது’
என்றக்கால், வாள்வாய் கூரிது என்பதாம்.
‘கடி கா’ (களவழி-29)
என்பது, காப்புடைய கா என்பதாம்.
‘கடித் தளிர்’
என்பது, புதுத் தளிர் என்பதாம்.
‘கடிது வந்தார்’
என்றக்கால், விரைந்து வந்தார் என்பதாம்.
‘கடும் பகல்’ (கலி - நெய்-28)
என்றக்கால், விளங்கு பகல் என்பதாம்.
‘கடும் புனல்’ (குறுந்-103)
என்றக்கால், மிக்க புனல் என்பதாம்; அது சிறந்த புனல்
என்பதூஉமாம்.
‘கடுங்கண் யானை’
என்றக்கால், அஞ்சத்தக்க யானை என்பதாம்.
‘கடுஞ்சூ டருகுவன்’ (அகம் -110)
என்றக்கால், முன்னின்று தேற்றந்தருவன் என்பதாம். ()
378. ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவ்விரு பொருளும்
படுதற்கும் உரித்து என்றவாறு.
வரலாறு:
‘கடுத்தன ளல்லளோ வன்னை’
என்றக்கால், ஐயுற்றனள் என்பதாம்.
‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’
என்றக்கால், கரிப்பார் மிளகு தின்ற என்பதாம். (87)
379. ஐவியப் பாகும்.
வரலாறு :
‘ஐதே காமம் யானே’ (நற்றினை-143)
என்றக்கால், வியக்கத்தக்கது என்பதாம். (88)
380. முனைவு முனிவாகும்.
வரலாறு :‘சேற்றுநிலை முனைஇய’
என்றக்கால், சேற்றுநிலை முனிந்த என்பதாம். (89)
381. வையே கூர்மை.
வரலாறு :‘வையிலை நெடுவேல்’
என்றக்கால், கூரிலைவேல் என்பதாம். (90)
382. எறுழ்வலி யாகும்.
வரலாறு :
‘வாளுடை யெறுழ்த்தோள்’
என்றக்கால், வலியுடைத் தோள் என்பதாம். (91)
383.
மெய்பெறக் கிளந்த வுரிச்சொ லெல்லா
முன்னும் பின்னும் வருபவை நாடி
யொத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்த
றத்த மரபிற் றோன்றுமன்