Primary tabs

றை மிகுதிப் பொருள என்றார். அதுபற்றி மிகுதி யென்னை?
என்றாற்கு, ஒன்றுவிடப் பெரிதாக என்பவால் எனின், அதனைக் கேட்டு
ஒழியான் ; பெரிது எனப்படுவது என்னை? என்றான் ; எனச்
சாலவாதல் என்றான் ; என்பதனானும் ஒழியான், சாலவாதல்
எனப்படுவது என்னை? என்றான் ; என, எத்துணையும் இறங்குதல்
என்றான் ; என, அத்துணையும் என்னை? என்று இவ்வாறு பிரித்துச்
சொற்களால் தெரிபு கூறுமேல் அது வேண்டா என விலக்கினவாறு. (94)
386. பொருட்குத் திரிபில்லை புணர்த்த வல்லின்.
இச்சூத்திரம் என்னதலிற்றோ வெனின், இது மேற்சூத்திரத்திற்குப்
புறனடை.
உரை : உரிச்சொல் பிறிதலது, அது பொருள் உணருமாறு
வல்லாற்குப் பிறசொற் கொணர்ந்து பொருள் உணர்த்தல் வேண்டா ;
திரிபின்றி அச் சொல்லினானே உணரப்படும் என்றவாறு.
என்னை, ‘உறு’ என்ற பதம் மிகுதிப் பொருட்டு என்றக்கால், அம்
மிகுதியையும் அதனானே யுணரலாம் ; உணருமாறு வல்லாற்குப்
பிறசொற் கொணர்ந்து உரைத்தல் வேண்டா என்பது. (95)
387. உணர்ச்சி வாயி லுணர்வோர் வலித்தே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் புறனடை.
யாஞ் சொல்லிய சொல்வாயிலே பற்றி யுணர்த்துக, அத்துணையால்
உணர்வார்க்கு அதுவே உணர்ச்சி வாயிலாம் ; அல்லாக்கால்
அவ்வுணர்வோரை வலித்தாமாற்றால் உணர்த்துக என்பதாம்.
என்னை,
‘பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள’ (தொல். உரி - 85)
என்பதனால் உணராத மடவோரை மற்றொரு வாய்பாட்டால்
உணர்த்துக. அல்லாக்கால், மேல்
நோக்கிச் சில மலர்கொடு
தூவிக்காட்ட வுணருமேல் அஃதே உணர்ச்சி வாயிலாக அறிக என்பது.
(96)