தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1330


து. (60) 

451. உரையிடத் தியலு முடனிலை யறிதல்.

இச்சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனின்,   உலகத்து   மாறுகொண்டு
வேறுபட்டியலுஞ்   சொற்களவை   அமைக   என்பது   உணர்த்துதல்
நுதலிற்று. 

உரை :  கட்டுரை  யுரைக்குமிடத்து  நடக்கும்  ஒருங்கு  நிலையும்
என்றவாறு. 

ஒன்று   உரைக்கு   மிடத்து   இயைபில்லாத   இரண்டு   சொல்
ஒருபொருட்கண் நிற்பச் சொல்லுதலுண்டு, உண்டேனும் அஃது அமைக
என்றவாறு. 

வரலாறு: ‘இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது’ என்பது ; சிறிதென்ற
சொல்லும்  பெரிதென்ற சொல்லும் தம்முண் மாறுகோளுடைய அந்நாழி
மேலே     நின்றனவேனும்     அமையும்     என்பது.     என்னை
அமையுமாறெனின், சிறிது என்று நின்றதன் சிறுமையே பெரிதென்பான்
சொல்லினானல்லன்,    அந்   நாழிக்கு   இந்நாழி   பெரிய   துணை
மிகுதியில்லை,  பெருமை  சிறிதெண்ணிய  சொல்லினான்  ; அமையும்
என்பது. (61) 

452. முன்னத்தி னுணருங் கிளவியு முளவே
யின்ன வென்னுஞ் சொன்முறை யான.
 

இச்சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின், இதுவும் சொற்கண்ணதோர்
பொருள்படுதல் வேற்றுமை யுணர்த்துதல் நுதலிற்று. 

உரை : சொல்லினவிடத்துச் சொற்கிடந்தவாறே குறிப்பினாற்கொண்டு
உணரப்படும்    பொருளும்உள;    சொற்களதியாண்டாயினும்   மற்று
இன்னவென்று தன்மை வேறுபாடு சொல்லுதன் முறைக்கண் என்றவாறு. 

வரலாறு : 

‘செஞ்செவி வெள்ளோக்கலர்’ 

எனவும், 

குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர்’ 

எனவும் வரும். 

செஞ்செவி  வெள்ளொக்கலர் என்றால், உதிரஞ் சொரியுஞ் செவியர்,
வெளிய சுற்றத்தார் என்பது அன்று ; செவியெல்லாஞ் சாலச்செம்பொன்
அணிந்து, முட்டில் செல்வத்தாக்கினையுடையர் என்றவாறு. 

‘குழைகொண்டு கோழி 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:44:20(இந்திய நேரம்)