Primary tabs

யெறியும்’ என்றக்காலும், கோழியெறிதலென்று உணரற்பாலது,
முட்டில் செல்வத்தார் என்பது உணரற்பாற்று. (62)
453. ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் மரபுவழுக்
காத்தது.
உரை : ஒரு பொருண்மேற் கிடந்த இருசொற் பிரிவின்றிநின்றன
வரையப்படாது என்றவாறு.
வரலாறு :
‘வையைக் கிறைவன் வயங்குதார் மாணகலந்
தையலா யின்றுநீ நல்குதி நல்காயேற்
கூடலார் கோவெடு நீயும் படுதியோ
நாடறியக் கவ்வை யொருங்கு’
வையைக்கு இறை யெனப்பட்டானும், கோ எனப்பட்டானும்
அவனாதலால், அவ்விருசொல்லும் ஒரு பொருட்கண் மேலே நின்றன ;
பிறபொருட்குப் பிரியா, அங்ஙனம் நிற்பன அமையும் என்பதாம்.
இனிப், ‘பிரிவில வரையப்படா’ எனவே, பிரிவுடையன வரையப்படும்
என்பதாம் ; அஃதியாதோ வெனின்,
‘கொய்தளிர்த் தண்டலைக் கூற்றப் பெருஞ்சேந்தன்
வைகலு மேறும் வயக்களிறே -- கைதொழுதேன்
காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெஞ்
சாலேகஞ் சார நட’
இதனுள், ‘கூற்றப்பெருஞ் சேந்தன்’ என்றார், பின்னைக் ‘காலேக
வண்ணன்’ என்றார் ; அவை யிரண்டு சொல்லும் பிரிவுடைய,
அதனான் அமையா ; யாவோ பிரிவெனின், ‘காலேகவண்ணம்’ என்பது
சாந்து, கூற்றப்பெருஞ் சேந்தற்கே யுரித்தாய் நிற்பதொன்றன்று.
‘காலேகவண்ணம்’ என்னுஞ் சாந்து பூசினார்க் கெல்லாங்
காலேகவண்ணர் என்று பெயராம், அதனாற் பிரிவுடைத்து ; ஆதலால்,
அமையாது என்பது.
மேற் கிளவியாக்கத்து,
‘இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும்’
(தொல். சொல். கிளவி - 38)
என்றும்,
‘சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு’
(தொல். சொல். கிளவி - 41)
என்றும்,
‘ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி’
(தொல். சொல். கிளவி - 42)
என்றும் ஒருபொருண்மேல் இருபெயர் வழுவும், பல பெயர் வழுவும்
கூறிப் போந்தான் ; அவ