தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   481


பண்டையார் வழக்கு. அறிசொல், அறிதற்குக் கருவியாகிய சொல். (2) 

அஃறிணை இரண்டு பால் 

3. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று
ஆயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே.
 

இஃது அஃறிணைப்பாலைப் பகுக்கின்றது. 

(இ-ள்.) ஒன்றறி சொல்லே பலவறி சொல் என்று-ஒருவன் ஒன்றனை
அறியுஞ்    சொல்லும்   பலவற்றை   அறியுஞ்   சொல்லும்   என்று
சொல்லப்பட்ட,  ஆயிரு பாற்சொல் அஃறிணைய.-அவ்விரண்டு கூற்றுச்
சொல்லும் அஃறிணையினையுடையவாம், எ-று. (3)  

பேடி முதலிய சொற்கள் உயர்திணைக்கண் அடங்கும் முறை 

4. பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியுமந் தந்தமக் கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்.
 

இஃது    ஐயம்    அறுக்கின்றது;   மேல்   தொகையுள்   ஒழிந்த
தெய்வத்தையும் வகையுள் ஒழிந்த பேடியையும் இவ்வாறாமென்றலின். 

(இ-ள்.)  உயர்திணை  மருங்கின்  பெண்மை சுட்டிய-ஒருவன் உயர்
திணை  இடத்துப் பெண்பாற்குரிய அமைதித் தன்மையைக் கருதுதற்குக்
காரணமான, ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்-ஆண்பாற்குரிய
ஆளுந்   தன்மை   திரிந்த   பெயர்ப்பொருளும்,   தெய்வம் சுட்டிய
பெயர்நிலைக்   கிளவியும் - தெய்வத்  தன்மையைக்  குறித்த பெயர்ப்
பொருளும்,  இவ்வென  அறியும் அந்தம் தமக்கு இலவே-இவையெனத்
தம் பெயர்ப்  பொருளினை வேறறிய நிற்கும் ஈற்று எழுத்தினையுடைய
சொற்களைத் தமக்குடைய அல்ல; உயர்திணை மருங்கின் பால் பிரிந்து
இசைக்கும் - உயர்திணை   இடத்திற்கு   உரிய  பாலாய்  வேறுபட்டு
இசைக்கும், எ-று. 

‘அலியன்று’ என்றற்குப் ‘பெண்மைசுட்டிய’ என்றார். ‘பெண்
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:14:51(இந்திய நேரம்)