தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   663


 

டுவரும்  முற்றுச்  சொல்லும்,  வினை  எஞ்சு  கிளவி - முடிக்கும்
வினையை  ஒழிபாக  உடைய  வினைச்சொல்லும்,  இன்மை செப்பல் -
இன்மை   என்னும்    பண்பினை   உணர்த்தும்   இல்லை  என்னும்
வினைக்குறிப்பு முற்றுச் சொல்லும், வேறு என் கிளவி - வேறு என்னும்
வேறுபாடுதன்னை உணர்த்திநிற்கும் வினைக்குறிப்பு  முற்றுச் சொல்லும்,
செய்ம்மன  -  மன  ஈற்றுப் பெயர் எச்சமாய் எதிர்காலம் உணர்த்தும்
செய்ம்மன   என்னுஞ்   சொல்லும்,   செய்யும்  என்னுஞ்  சொல்லும்,
செய்த-அகர  ஈற்று  எச்சமாய்  இறந்த   காலம்  உணர்த்தும்  செய்த
என்னுஞ் சொல்லும், என்னும் அம்முறை நின்ற ஆயெண்  கிளவியும் -
என்று  சொல்லப்படுகின்ற  அவ்வடைவின்கண்   நின்ற  அவ்வெட்டுச்
சொல்லும்,  பிரிவு வேறுபடூஉம் செய்திய ஆகி - பொதுமையிற் பிரிந்து
ஒருகால்  உயர்திணையையும்  ஒருகால்  அஃறிணையையும்  உணர்த்தி
வேறுபடுந்  தொழிலை  உடையவாய்,  இருதிணைச் சொற்கும். ஓரன்ன
உரிமைய   -   இருதிணையை   உணர்த்துஞ்  சொல்லாதற்கும்  ஒத்த
உரிமையவாம், எ-று.
 

என் செய்யாநின்றான்? என்று வினாயவழி, உண்ணாநின்றான், எனச்
செப்புதலின்,   செய்   என்னும்  வாசகம்  எல்லாத்  தொழிலினையும்
அகப்படுத்தி   நிற்றல்பெற்றாம்.   இருதிணைக்கும்   பொதுவாயதொரு
பொருள்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:48:41(இந்திய நேரம்)