தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   713


்துவனவற்றை உரையசை என்றும் பொருள் உணர்த்தாது சொற்களை
அசைத்து  நிற்பனவற்றை   அசைநிலை  என்றுங்  கூறுதல்  ஆசிரியர்
கருத்தாதலை இரண்டு அதிகாரத்துங் கண்டு கொள்க. (29) 

ஒப்பில் போலி

280. ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும். 

இதுவும் அது. 

(இ-ள்.)   ஒப்பில் போலியும் அப்பொருட்டு ஆகும்-ஒன்றற்கொன்று
ஒக்கும்  என்னும் பொருள்  தன்கணின்றி   வரும்  ‘போலி  என்னுஞ்
சொல்லும்     அக்கட்டுரைக்கண்ணே      அசைத்த     நிலையாகிய
பொருளையுடைத்தாய் வரும், எ-று.

அப்பொருட்டு எனவே, ஆங்கவும் பொருள் தருதல் பெற்றாம்.

(எ-டு.)    ‘மங்கலம் என்பதோர் ஊர்உண்டு போலும்!’ ‘நெருப்பழற்
சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம், எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும்’
(நாலடி.   124)   எனப்  போலும்  எனனும்  இடைச்சொல்  ஊரையும்
நெய்யையும் புனைந்து நின்றவாறு காண்க. (30) 

அசைநிலைச் சொற்கள்

281. யாகா,
பிறபிறக் கரோபோ மாதென வரூஉம்
ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி.
 

இஃது, அசைநிலை கூறுகின்றது. 

(இ-ள்.)  யா கா பிற பிறக்கு அரோ  போ மாது   என   வரூஉம் ஆயேழ் சொல்லும்  அசைநிலைக்    கிளவி-யா,    கா,  பிற, பிறக்கு, அரோ, போ,  மாது  என்று  சொல்லவருகின்ற  அவ்வெழு  சொல்லுந் தாஞ்  சார்ந்த சொல்லை   அசைத்துநிற்கும்   நிலைமையை யுடைய சொல்லாம், எ-று. 

(எ-டு.)     யா பன்னிருவர்   மாணாக்கர் உளர் அகத்தியனார்க்கு
எனவும்,  இன்னுந்,  ‘தோழியா சுவாகதம் போது கீங்கென’ (சீவக. 1021)
என்று  பாடமாயின்  அதுவும் இதற்கு உதாரணம். ‘புறநிழற் பட்டாளோ
இவளிவட் காண்டிகா’ (கலி.99:9)  எனவும், ‘தான்பிற வரிசை அறிதலின்
தன்னுந்  தூக்கி’  (புறம்.140:5,6)  எனவும், ‘நசைதர வந்தோர் நசைபிறக்
கொழிய’  (புறம்.15:15)  எனவும், ‘நோதக இருங்குயில் ஆலுமரோ’ (கலி.
33:24,25)   எனவும்,  ‘பிரியின்  வாழா  தென்போ  தெய்ய’  எனவும்,
‘விளிந்தன்று   மாதவர்த்  தெளிந்தவென்  நெஞ்சே’  (நற்.178) எனவும்
வரும். (31) 

பிரிவில் அசைநிலைச் சொற்கள்

282. ஆக ஆக லென்ப தென்னும்
ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை. 

இது,  தாஞ்  சார்ந்து    நின்ற    சொல்லின்   பொருண்மையை
உணர்த்திநிற்கும் இடைச்சொற்களைக் கூறுகின்றது. 

(இ-ள்.)    ஆக ஆகல் என்பது என்னும் ஆவயின் மூன்றும்-ஆக,
ஆகல், என்பது என்று சொல்லப்படுகின்ற அவ்விடத்து மூன்றும், பிரிவு
இல் அசைநிலை-தாஞ் சார்ந்த சொற்களின் பொருள்களைப் பிரிதலன்றி
உணர்த்தும் அசைநிலையாம்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:58:00(இந்திய நேரம்)