தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3512


ட்டும் அது.

இங்ஙனம் வந்துழியுங் கற்புச் சிறந்ததாம்.

இனிப் பிறவாற் கொள்வன வருமாறு:

“பொன்னிணர் வேங்கை கவினிய பூம்பொழிலுள்
நன்மலை நாடன் நலம்புனைய - மென்முலையாய்
போயின சின்னாள் புனத்து மறையினால்
ஏயினார் இன்றி இனிது”
             (ஐந்திணை.ஐம்.11)

“கானலஞ் சிறுகுடிக் கடன்மேம் பரதவர்
நீனிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇத்
தண்பெரும் பரப்பின் ஒண்பத நோக்கி
அங்கண் அரில்வலை உணக்குந் துறைவனொடு
அலரே, யன்னை யறியி னிவணுறை வாழ்க்கை
அரிய வாகும் நமக்கெனக் கூறின்
கொண்டுஞ் செல்வர்கொல் தோழி உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
கணநிரை கிளர்க்கு நெடுநெறிச் சகடம்
மணன்மடுத்து உரறும் ஓசைக் கழனிக்
கருங்கால் வெண்குருகு வெரூஉம்
இருங்கழிச் சேர்ப்பின்தம் இறைவ னூர்க்கே”
     (நற்.4)

என வரும்.

“விழுந்த மாரிப் பெருந்தண் சாரற்
கூதிர்க் கூதளத் தலரி நாறும்
மாதர் வண்டின நயவருந் தீங்குரன்
மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர்வரை நாடற் குரைத்த லொன்றே
துயர்மருங் கறியா அன்னக் கிந்நோய்
தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ
செய்யா யாகலிற் கொடியை தோழி
மணிகெழு நெடுவரை யணிபெற நிவந்த
செயலை யந்தளி ரன்னவென்
மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே.”
       (நற்.244)

இஃது அறத்தொடு   நிற்குமாறு   தோழிக்குத்   தலைவி  கூறியது.

இன்னும் அதனானே தோழியைத் தலைவி ஆற்றுவித்தலுங் கொள்க.

“ஞெகிழ்ந்த தோளும் வாடிய வரியுந்
தளிர்வனப் பிழந்தநின் றிறனும் நோக்கி
யாஞ்செய்வ தன்றிவள் துயரென அன்பிறில்
அழாஅல் வாழி தோழி வாழைக்
கொழுமட லகலிலைத் தளிதலைக் கலாவும்
பெருமலை நாடன் கேண்மை நமக்கே
விழும மாக அறியுநர் இன்றெனக்
கூறுவை மன்னோ நீயே
தேறுவென் மன்யா னவருடை நட்பே”
         (நற்.309)

என வரும்.

“கூறுதல் அயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன்
நெஞ்சுகள னாக நீயலென் யானென
நல்தோள் மணந்த ஞான்றை மற்றவன்
தவாஅ வஞ்சின முரைத்தது
நோயோ தோழி நின்வயி னானே.”
          (குறுந்.36)

இதுவும் அது.                                            22

தோழிகூற்று நிகழுமிடமிவையெனத் தொகுத்துக் கூறல்
 

112.
நாற்றமுந் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியுஞ்
செய்வினை மறைப்பினுஞ் செ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:45:52(இந்திய நேரம்)