தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3740


கொண்டலொகு கழிபடர்க்
காமர் நெஞ்சங் கையறு பினையத்
துயரஞ் செய்துநம் அருளா ராயினும்
அறாஅ லியரோ அவருடைக் கேண்மை
அளியின் மையின் அவணுறைவு முனைஇ
வாரற்க தில்ல தோழி கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்புந்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை
அகமடற் சேக்குந் துறைவன்
இன்றுயின் மார்பின் சென்றஎன் நெஞ்சே.’’
    (அகம்.40)

 

இது     பொருட்  பிரிவிடைத்  தோழிக்கு உரைத்தது. இக்களிற்றி
யானைநிரையுள்,  நெய்தற்கு முதலுங் கருவும்  வந்து உரிப் பொருளாற்
சிறப்பெய்தி    முடிந்தது.   இச்சிறப்பானே,    முதலின்றிக்   கருவும்
உரிப்பொருளும்  பெறுவனவும்,  முதலுங்  கருவுமின்றி உரிப்பொருளே
பெறுவனவுங் கொள்க.
  

‘‘திருநகர் விளங்கு மாசில் கற்பி
னரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு
நின்னுடைக் கேண்மை யெவனோ முல்லை
யிரும்பல் கூந்த னாற்றமும்
முருந்தேர் வெண்ப லொளியநீ பெறவே.
’’

 

இது பொருள்வயிற் பரிந்தோன் சுரத்து  நினைந்து உரைத்தது. இது
முதற்பொருளின்றி வந்த முல்லை.
  

‘‘கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி
யிளைய ரேவ வியங்குபரி கடைஇப்
பகைமுனை வலிக்குங் தேரொடு
வினைமுடித் தனர்நங் காத லோரே.’’

 

இது   வந்தாரென்  றாற்றுவித்தது.   இது  முதலுங்  கருவு மின்றி
வந்த முல்லை.
  

‘‘நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா
லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற் - பிறையெதிர்ந்த
தாமரை போன்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
வேமரை போந்தன வீண்டு.’’
           (திணைமாலை.1)

  

இது மதியும்படுத்தது, இது முதற்பொருளின்றி வந்த குறிஞ்சி.
  

‘‘முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலைய னொள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே.’’

 

இஃது   இளையள்   விளைவிலள் என்றது. முதலுங் கருவு மின்றி
வந்த குறிஞ்சி. இது நாணநாட்டம்
  

‘‘நாளு நாளு மாள்வினை யழுங்க
வில்லிருந்து மகிழ்வோருக் கில்லையாற் புகழென
வொண்பொருட் ககல்வர்நங் காதலர்
கண்பனி துடையினித் தோழி

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:29:42(இந்திய நேரம்)