தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3893


துகளம் படுநரும்
நீர்ப்பெயற் பிறந்த மொக்குள் போலத்
தாக்கிய விசையிற் சிதர்ந்துநிலம் படுநருந்
தகருந் தகருந் தாக்கிய தாக்கின்
முகமுகஞ் சிதர முட்டு வோரும்
முட்டியின் முறைமுறை குத்து வோருங்
கட்டிய கையொடு கால்தட் குநருங்
கிட்டினர் கையறத் தொட்டுநிற் போருஞ்
சுட்டிய பெயரற விட்டழிப் போருஞ்
சக்கரம் போலச் சங்குவிட் டெறிநருஞ்
சிலைப்புடை முரசிற் றலைப்புடைக் குநரும்
மல்லிற் பிடித்தும் வில்லி னெற்றியும்
ஊக்கியும் உரப்பியு நோக்கியு நுவன்றும்
போக்கியும் புழுங்கிய நாக்கடை கவ்வியும்
எயிறுடன் றிருகியுங் கயிறுபல வீசியும்
இனைய செய்தியின் முனைமயங் குநரும்
பிறப்பும் பெருமையுஞ் சிறப்புஞ் செய்கையும்
அரசறி பெருமையும் உரைசெல் லாண்மையும்
உடையோ ராகிய படைகொண் மாக்கள்
சென்றுபுகு முலக மொன்றே யாதலின்
ஒன்றுபடு மனத்தொடு கொன்று கொன்றுவப்பச்
செஞ்சோற்று விலையுந் தீர்ந்துதம் மனைவியர்
தம்பிணந் தழீஇ நொந்துகலுழ்ந் திரங்கவும்
புதுவது வந்த மகளிர்க்கு
வதுவை சூட்டிய வான்படர்ந் தோரே.’’
 

                         
(புறத்திரட்டு.1355.அமர்.10)

எனவும்,  

‘‘சென்ற வுயிர்போலத் தோன்றா துடல்சிதைந்தோ
னின்ற வடிபெயரா நின்றவை - மன்ற
லரமகளிர் மங்கலத்திற் காங்காங்கு வைத்த
மரவடியே போன்றன வந்து’’
  

எனவும் வரும்.  

‘‘வெண்குடை மதிய மேனிலாத் திகழ்தரக்
கண்கூ டிறுத்த கடன்மருள் பாசறைக்
குமரிப் படைதழீஇக் கூற்றுவினை யாடவர்
தமர்பிற ரறியா வமர்மயங் கழுவத்
திறையும் பெயருந் தோற்றி னுமரு
ணாண்முறை தபுத்தீர் வம்மி னீங்கெனப்
போர்மலைந் தொருசிறை நிற்ப யாவரும்
அரவுமிழ் மணியிற் குறுகார்
நிறைதார் மார்பினின் கேள்வனைப்பிறரே.’’
    (புறம்.294)

‘‘கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.’’
             (குறள். படைச்.4)
 

‘‘நறுவிரை துறந்த நரைவெண் கூந்த
லிரங்கா ழன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
மடப்பா லாய்மகள் வள்ளுகிர்த் தெறித்த
குடப்பாற் சில்லுறை போலப்

படைக்குநோ யெல்லாந் தானா யினனே.’’
      (புறம்.276)

‘‘தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற்
கொற்கத் துதவினா

 
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:59:10(இந்திய நேரம்)