தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5118


‘‘ஞாயிறு போற்றுது ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்’’               (சிலப். மங்கல)

எனவும்    இவை   குடையையும்   செங்கோலையுங்   திகிரியையும்
புனைந்தன.

மாணார்ச்   சுட்டிய வாண்மங்கலமும் - பகைவரைக் குறித்த வாள்
வென்றியாற்  பசிப்பிணி  தீர்ந்த  பேய்ச்சுற்றமும்  பிறரும் வாளினை
வாழ்த்தும் வாண்மங்கலமும்;

இது     பிறர்  வாழ்த்தப்படுதலிற்    கொற்றவையைப்   பரவும்
‘வென்றவாளின் மண்’    (புறம்.68)    என்பதனின்   வேறாயிற்று.
புகழ்ச்சிக்கட்  பகைவரை  இகழ்ந்து  புகழ்தலின்  ‘மாணார்ச் சுட்டிய’
என்றார்.

உ-ம்:

‘‘ஆளி மதுகை யடல்வெய்யோன் வாள்பாடிக்
கூளிகள் வம்மினோ கூத்தாடக் - காளிக்குத்
தீராத வெம்பசி தீர்த்துநாஞ் செங்குருதி
நீராட்டி யுண்ட நிணம்’’

என வரும்.

‘‘அரும்பவிழ்தார்க் கோதை யரசெறிந்த வொள்வாள்
பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு
வண்டாடும் பக்கமு முண்டு குறுநரி
யுண்டாடும் பக்கமு முண்டு’’           (முத்தொள்.38)

இது பிறர் கூறியது.

இது பரணியிற் பயின்றுவரும்.

மன்னெயில்   அழித்த மண்ணு மங்கலமும் - மாற்றரசன் வாழ்ந்த
மதிலையழித்துக்  கழுதையேரான் உழுது வெள்ளைவரகுங் கொள்ளும்
வித்தி மங்கலமல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடு மங்கலமும்;

அழித்ததனான் மண்ணுமங்கலம்.

உ-ம்:

‘‘கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்’’   (புறம்.15)

என எயிலழித்தவாறு கூறி,

‘‘வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட’’                        (புறம்.15, 20 -1)

எனவே, ஒருவாற்றான் மண்ணியவாறுங் கூறியவாறு காண்க.

குடுமிகொண்ட     மண்ணுமங்கலம்   எயிலழித்தல் கூறாமையின்
இதனின் வேறாயிற்று.

பரிசில் கடைஇ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:54:11(இந்திய நேரம்)