தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   196


    ஒருமூ வகைத்தே.

    126 'அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது
    பின்னிலை முயற்சி பெறாள்' என மொழிப.

    127 முயற்சிக் காலத்து, அதர்ப்பட நாடிப்
    புணர்த்தல் ஆற்றலும் அவள்வயினாள்

    128 'குறி எனப்படுவது இரவினுன் பகலினும்
    அறிய கிளந்த ஆற்றது' என்ப

    129 இரவுக் குறியே இல்லகத்துள்ளும்
    மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே
    மனையகம் புகாஅக் காலையான

    130 'பகல் புணர் களனே புறன்' என மொழிப
    அவள் அறிவு உணர வருவழியான

    131 அல்லகுறிப்படுதலும் அவள்வயின் உரித்தே,
    அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே.

    132 ஆங்கு, ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே,
    ஓங்கிய சிறப்பின் ஒரு சிறையான.

    133 மறைந்த ஒழுக்கத்து, ஓரையும் நாளும்
    துறந்த ஒழுக்கம், கிழவோற்கு இல்லை.

    134 ஆற்றினது அருமையும், அழிவும், அச்சமும்,
    ஊறும் உளப்பட, அதன் ஓரன்ன.

    135 தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப

    136 தாய் அறிவுறுதல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:33:39(இந்திய நேரம்)