தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   198


    எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும்;
    அஞ்ச வந்த உரிமைக்கண்ணும்;
    நல் நெறிப் படரும் தொல் நலப் பொருளினும்;
    பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக்
    குற்றஞ் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்;
    `நாமக் காலத்து உண்டு' எனத் தோழி
    ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்;
    அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச்
    சொல்லுறு பொருளின்கண்ணும்; `சொல் என,
    ஏனது சுவைப்பினும், நீகை தொட்டது
    வானோர் அமுதம் புரையுமால் எமக்கு!' என
    அடிசிலும் பூவும் தொடுத்தற்கண்ணும்;
    அந்தணர் திறத்தும், சான்றோர் தேஎத்தும்,
    அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும்,
    ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்; ஒழுக்கத்துக்
    களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி
    அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும்;
    அந்தரத்து எழுதிய எழுத்தின் மான,
    வந்த குற்றம் வழி கெட ஒழுகலும்;
    அழியல் `அஞ்சல்' என்று ஆயிரு பொருளினும்
    தான் அவள் பிழைத்த பருவத்தானும்;
    நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளிப்
    பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித்
    தன்னின் ஆகிய தகுதிக்கண்ணும்;

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:33:50(இந்திய நேரம்)