தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   200


    காமக்கிழத்தி, மனையோள், என்று இவர்
    ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்;
    சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி
    இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும்;
    அருந் தொழில் முடித்த செம்மல் காலை,
    விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும்;
    மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும்
    கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக்கண்ணும்;
    ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇப்
    பண் அமை பகுதி முப்பதினொருமூன்றும்-
    எண்ணருஞ் சிறப்பின் கிழவோன் மேன.

    145 `அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்,
    ஏற்றற்கண்ணும்; நிறுத்தற்கண்ணும்;
    உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில்
    பெருமையின் திரியா அன்பின்கண்ணும்;
    கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின்,
    அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்;
    இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்;
    கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி
    நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ
    நளியின் நீக்கிய இளி வரு நிலையும்;
    புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு
    அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி,
    இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி,
    எதிர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:34:02(இந்திய நேரம்)