தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   201


    பெய்த்து மறுத்த ஈரத்து மருங்கினும்;
    தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி,
    "எங்கையர்க்கு உரை!" என இரத்தற்கண்ணும்;
    செல்லாக் காலை, 'செல்க!' என விடுத்தலும்;
    காமக்கிழத்தி தன் மகத் தழீஇ,
    ஏமுறு விளையாட்டு இறுதிக்கண்ணும்;
    சிறந்த செய்கை அவ் வழித் தோன்றி,
    அறம் புரி உள்ளமொடு, தன் வரவு அறியாமைப்
    புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும்;
    "தந்தையர் ஒப்பர் மக்கள்" என்பதனால்,
    அந்தம் இல் சிறப்பின் மகப் பழித்து நெருங்கலும்;
    "கொடியோர் கொடுமை சுடும்!" என ஒடியாது,
    நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப்
    பகுதியின் நீங்கிய தகுதிக்கண்ணும்;
    கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி,
    அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்
    "காதல் எங்கையர் காணின் நன்று என,
    மாதர் சான்ற வகையின்கண்ணும்;
    தாயர் கண்ணிய நல் அணிப் புதல்வனை
    மாயப் பரத்தை உள்ளிய வழியும்;
    தன்வயின் சிறைப்பினும்; அவன் வயின் பிரிப்பினும்;
    இன்னாத் தொல் சூள் எடுத்தற்கண்ணும்;
    காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:34:07(இந்திய நேரம்)