Primary tabs
-
சொல்லதிகாரம் - மூலம்உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்

புணர்ந்த நகைமொழியானும், என்று
உரை வகை நடையே நான்கு' என மொழிப476 அதுவேதானும் இரு வகைத்து ஆகும்
477 ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே;
ஒன்றே யார்க்கும் வரைநிலை இன்றே478 ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்,
தோன்றுவது கிளந்த துணிவினானும்,
என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே479 'நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும்,
மென்மையும், என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி' என்ப480 'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழிதானே மந்திரம்' என்ப481 எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப்
பொருட்புறத்ததுவே, குறிப்பு மொழியே482 பாட்டிடைக் கலந்த பொருள ஆகிப்
பாட்டின் இயல பண்ணத்தியல்பே483 அதுவேதானும் பிசியொடு மானும்
484 அடி நிமிர் கிளவி ஈர் ஆறு ஆகும்;
அடி இகந்து வரினும் கடி வரை இன்றே485 கிளர் இயல் வகையின், கிளந்தன தெரியின்,
அளவியல் வகையே அனை வகைப்படுமே486 கைக்கிளை முதலா எழு பெருந் திணையும்,


