தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agapporul Veenaa

பெரும்பாண் ஆற்றுப்படை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   236

மடவரல் மகளிரொடு பகல் விளையாடிப்
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெருந் துறைச்
செவ்வி கொள்பவரோடு அசைஇ; அவ் வயின்
அருந் திறல் கடவுள் வாழ்த்திச் சிறிது நும்
கருங் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின்.
காழோர் இகழ் பதம் நோக்கிக் கீழ,
நெடுங் கை யானை நெய்ம் மிதி கவளம்
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில்,
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,
திண் தேர் குழித்த குண்டு நெடுந் தெருவில்,
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்க்
கடை கால்யாத்த பல் குடி கெழீஇக்
கொடையும் கோலும், வழங்குநர்த் தடுத்த
அடையா வாயில், மிளை சூழ் படப்பை,
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றிச்
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்,
இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக்
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக் கூறும் பலாஅப் போல,
புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய
மலர்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 14:02:51(இந்திய நேரம்)